Thursday 17 January 2013

குருநானக் கல்லூரி - செஞ்சுருள் சங்க விழா (9.01.2013)

குருநானக் கல்லூரி - செஞ்சுருள் சங்க விழா
வாழ்க்கையைக் கொண்டாடுவோம் -2013


      குருநானக் கல்லூரி செஞ்சுருள் சங்கம் - நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் 9.01.2013 புதன் கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் வாழ்க்கையைக் கொண்டாடுவோம் -2013 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த இவ்விழாவில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சென்னை மாவட்ட மேற்பார்வையாளர் திரு. ஜெயபாண்டி அவர்கள் கலந்து கொண்டார். அவர் மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் பரவும் முறைகள், அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள், எய்ட்ஸ் நோய் குறித்த மூடநம்பிக்கைகள் ஆகியவற்றை மாணவர்களிடையே சிறப்புறவும், அறிவியல் பூர்வமாகவும் எடுத்துரைத்தார். அவரது பேச்சின் இறுதியில் மாணவர்களின் வினாக்களுக்கு விடையளித்து அவர்களது சந்தேகங்களை நீக்கினார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட மற்றொரு சிறப்பு விருந்தினரான திருமதி. பாக்கியலட்சுமி அவர்கள். தான் எவ்வித தவறும் செய்யாமலேயே எய்ட்ஸ் நோய்க்கு  ஆளாக நேர்ந்ததையும், பிறகு அதனையே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன்னைப் போல் வேறு எவரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டதையும் எடுத்துக் கூறினார். மேலும் மாணவர்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்காமல் ஒழுக்கமாக இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கல்லூரி முதல்வர் முனைவர். மெர்லின் மொரைஸ் அவர்கள் முன்னிலை வகிக்க, விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களை செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர். முனைவர்.மு.மூர்த்தி வரவேற்றுப் பேசினார்.  நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்களான திருமதி. சசிகலா மற்றும் திருமதி. ஞானசங்கரி ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்  திரு. மு. தியாகராஜ் நன்றியுரை  வழங்கினார்.

No comments:

Post a Comment